Tuesday, August 30, 2016

மரபியல் மாற்ற குழந்தைகள் இறக்குமதி மட்டுமே இனி பாக்கி...

மரபியல் மாற்ற குழந்தைகள் இறக்குமதி மட்டுமே இனி பாக்கி...
அதற்குள் என் மக்கள் விழிப்பார்களா?...
நாட்டு காளை அழிக்க வெளிநாட்டிலிருந்து கலப்பின காளையை இறக்குமதி செய்யுறீங்க...
தேங்காய் விலையை குறைக்க பாமாயில் பெயரில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுறீங்க.
சமையல் எண்ணெய் விலையை குறைக்க
குருடாயிலை இறக்குமதி செய்யுறீங்க..
அரிசி விலையை குறைக்க சீனாவிலிருந்து
பிளாஸ்டிக் அரிசியை கலப்படம் செய்யுறீங்க...
கரும்பு விலையை குறைக்க வெளிநாட்டிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யுறீங்க...
துவரம்பருப்பை ஆப்ரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்யுறீங்க...
பாரம்பரிய விதையை அழிக்க மரபியல் மாற்ற விதையை ஆய்வு செய்ய அனுமதி கொடுக்குறீங்க...
இயற்கை விவசாயத்தை அறவே அழிக்க ஈராக் யூரியாவை இறக்குமதி செய்யுறீங்க...
நாட்டு மருத்துவத்தை அழிக்க வெளிநாட்டிலிருந்து மாத்திரை கம்பெனிகளை இறக்குமதி செய்யுறீங்க...
மின்சாரம் வேண்டும் என்று அணு உலையை இறக்குமதி செய்யுறீங்க...
புராதன மலையை உடைக்க நியூட்ரினோ திட்டம் தரீங்க...
இயற்கை படுகொலைக்கு மீத்தேன் திட்டம் தரீங்க...
நம் நாட்டு இயற்கை மருத்துவத்தை விட்டு வெளிநாட்டு மருத்துவ இறக்குமதி கம்பெனிக்கு ஆதரவு தர்றீங்க...
அமெரிக்கா ஆறு மாதம் பதப் படுத்திய பிணக் கோழியை இறக்குமதி செய்யுறீங்க...
இது எல்லாம் பத்தாதுனு இலவசமா அரிசி, பருப்பு, சீலை, வேஷ்டி, டிவி, ஸ்க்கூட்டி, மிக்ஸி, கிரைண்டர்னு எல்லாத்தையும் கொடுத்து ஓட்டுக்கு துட்டும் கொடுத்து எங்க மக்கள் வாயை அடச்சுட்டீங்க..
அப்புறம் இன்னொரு விஷயம் மறந்துட்டேன்..
எல்லாத்தையும் அனுபவிச்ச எங்க மக்களுக்கு ஆண்மை மறைந்து,பெண்மை தொலைந்து இனி பிள்ளை பேரு கிடைப்பதே கஷ்டம்தான்...
அதனால மரபியல் மாற்ற செய்த குழந்தைகளையும் வெளி நாட்டில் இருந்தே இறக்குமதி செஞ்சு ஆளுக்கு ஒண்ணு இலவசமா கொடுங்க
மகா அரசர்களே..!!.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

No comments:

Post a Comment