Tuesday, August 30, 2016

மெளனவிரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள்.

மெளனவிரதம் இருப்பது வாய் எனும்
உறுப்பின் மற்றொரு விரதமாகும்.
மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது
தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும்
இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும்
தடையில்லை. உலகின் சிறந்த மொழி
மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த
வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில்
இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக
அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால்
உங்கள் உள்ளுணர்வு மிகவும்
கூர்மையானதாக மாறி உங்களை
விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.
* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர்
காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை
ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும்
விரதத்திற்கு இது எதிரான செயல்.
மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை
ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை
மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள்.
அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை
முழுமையாக உணரமுடியும்.
* விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும்
விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில்
கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச
விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம்
தொடு உணர்வுக்கு விரதமாகும்.
* ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம்,
அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம்.
தனது எடுத்துக்கொண்ட செயலை
எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல்
வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை
தடையில்லாமல் தினமும் எந்த காரணம்
கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம்.
ஈஸ்வரனிடத்தில் முழுமையான
ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி.
ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை
விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத்
தொடங்கும். இறைவனை நினைத்து
உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில்
ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும்
இதுதான்.
* நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும்
தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது.
நமது உணர்வு உறுப்புக்களை சரியான
முறையில் பயன்படுத்தினால் அதன்
சக்தியையும் படைப்பாற்றலையும்
மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு
சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு
நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம்
அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும்
ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது
அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு
உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல
செயல்களில் ஈடுபடும் பொழுது
பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள்
நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள்
உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல்
எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக
வசம் செய்வார்.📚

No comments:

Post a Comment